மதுரையில் கூடிய TNTJ வின் மாநில செயற்குழு!

சிறப்பாக செயல்படும் மாவட்டங்களுக்கு ரூ 30 ஆயிரம் பரிசு மாவட்ட அளவில் இரத்த தானத்தில் முதலிடம் பிடிக்கும் முதல் மூன்று மாவட்டங்களுக்கு முறையே ரூ. 15 000 ரூ. 10 000 ரூ. 5000 என்றும் கிளை அமைப்புகளில் ஒரே முகாமில் 100 பேர் இரத்ததானம் செய்தால் அக்கிளைக்கு டிஎன்டிஜே ஷீல்டு' வழங்கப்படும
மேலும் கிளைகளுக்கு ரூ 15 ஆயிரம்!
செயற்குழுவில் மாநில நிர்வாகம் அதிரடி அறிவிப்பு
செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!



மதுரை காமராஜர் சாலையிலுள்ள 'சேம்பர் ஆஃப் காமர்ஸ்' அரங்கில் கடந்த 17-08-08 அன்று நடந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் எம்.ஐ. சுலைமான் தலைமையில் கூடியது. இச்செயற்குழு கூட்டம் நிர்வாகரீதியான குறை நிறைகளை அலசியும் பல்வேறு முக்கியத் தீர்மானங்களை இயற்றியும் எழுச்சிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. விறுவிறுவென அரங்கத்திற்கு வந்த செயற்குழு உறுப்பினர்கள் ரூபாய் 25 செலுத்தி செயற்குழு கூட்டத்திற்கான அனுமதி அட்டைகளை வாங்கி சட்டை யில் குத்திக்கொண்டு அரங்கத்திற்குள் நுழைந்த வண்ணம் இருந்தனர்.

காலை 10.15 மணிக்குத் துவங்கிய மாநில செயற்குழுவில் ஜமாஅத்தின் மூத்த தலைவர் மவ்லவி ஷம்சுல் லுஹா ரஹ்மானி துவக்க உரையாற்றி செயற்குழு நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார். அவர் தனது துவக்க உரையில் நிர்வாகத்திற்கு கட்டுப்படுவதின் அவசியம் பற்றி விளக்கமளித்துப் பேசியதுடன் நிர்வாகிகளிடத்தில் இருக்க வேண்டிய இக்லாஸ்' என்னும் தூய்மை பண்பாடு ஒழுக்கம் ஆகிய பண்புகளே மறுமையில் வெற்றி அளிக்கும் எனக் குறிப்பிட்டார்.

மவ்லவி ஷம்சுல்லுஹாவைத் தொடர்ந்து உரை நிகழ்த்திய மாநிலத் துணைத் தலைவர் ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமைக்கு சொந்த இடம் வாங்கும் திட்டம் கைவிடப்பட்டது பற்றி மாநிலத் தலைமை நிர்வாகக் குழு எடுத்த முடிவை செயற்குழு உறுப்பினர்களுக்கு விளக்கிப் பேசினார்.

'தஞ்சை வல்லத்தில் நடந்த தவ்ஹீத் எழுச்சி மாநாட்டிற்காக வளைகுடாவில் வசிக்கும் சகோதரர்கள் பலர் ஒரு மாத இரண்டு மாத சம்பளத்தைக்கூட நன்கொடையளித்திருந்தனர். சில இடங்களில் இன்னும் ஒரு வருடத்திற்கு உங்களிடம் நன்கொடை கேட்டு வர மாட்டோம்' என வளைகுடா நிர்வாகிகள் அங்குள்ள சகோதரர்களிடம் வாக்குறுதிகளையும் வழங்கியுள்ளனர். இந்தச் சூழலில் தலைமையத்திற்கு சொந்த இடம் வாங்க மீண்டும் அம்மக்களிடத்தில் போய் நிற்பது அவர்களை சிரமத்திற்குள்ளாக்குவதாக அமையும். இது தவிர இதற்காக உழைக்க ஆரம்பித்தால்... சுமார் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை அனைத்து நிர்வாகிகளுமே இந்த விஷயத்திலேயே கவனம் செலுத்தும் சூழ்நிலை ஏற்படும். 'கடந்த பொதுக்குழு வில் தாஃவா பணியை வேகப்படுத்துவோம் என வாக்குறுதியளித்தபடி நடக்க முடியாமல் தாஃவா பணிகள் மார்க்க விஷயங்களில் பின்னடைவை சந்திக்க நேரிடும். கொஞ்ச காலம் அவகாசம் எடுத்து அதன்பின் தலைமைக்கான சொந்த இடம் பற்றிய விஷயத்தைக் கையிலெடுத்தால் இலகுவாக அதை செயல்படுத்த முடியும். ஆகவே சிறிது காலத்திற்கு இத்திட்டத்தை மாநிலத் தலைமை தள்ளி வைத்திருக்கிறது'' என்று விளக்கிய அல்தாஃபி இந்த வகைக்காக தலைமையகத்திற்கு வந்திருக்கும் தொகை ஒரு வருடமாக கையிலுள்ளது.



இந்த நிலையில் சொந்த இடம் வாங்காமல் இருந்தால் மக்களிடையே தவறான எண்ணம் உருவாகிவிடும் என்பதால் நிறுவனத் தலைவர் பீ.ஜே. அவர்களின் ஆலோசனையின் பேரில் வாங்கிய தொகையை சம்பந்தப் பட்டவர்களிடமே திருப்பித் தந்துவிட முடிவு செய்திருக்கிறது மாநில நிர்வாகம்'' என்று நீண்ட விளக்கமளித்துப் பேசினார்.

மாநிலத் தலைமையின் இந்த முடிவை செயற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக ஏற்றுக் கெண்டதைத் தொடர்ந்து தனது உரையை மேலும் தொடர்ந்த அல்தாஃபி "இதுவரை மூன்று மாவட்டங்களில் மட்டுமே தர்பியா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில் தர்பியாவிற்கு மூடு விழா நடத்தப் பட்டுள்ளது. அதனால் இனி எந்தக் கிளையிலாவது பொதுக்கூட்டம் நடத்த வேண்டுமானால் அதற்கு முன் அக்கிளையில் இரண்டு தர்பியாக்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும்'' என்ற மாநில நிர்வாகத்தின் நிபந்தனையைத் தெரிவித்து தர்பியா நடத்தப்பட வேண்டியதின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

மாநிலத் தலைவர் எம்.ஐ. சுலைமான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அவர் தாஃவா பணியின் முக்கியத்துவம் தர்பியாவின் அவசியம் குறித்து விளக்கிப் பேசியதோடு நிர்வாகிகள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் தனி நபர் அழைப்புப் பணி அண்டை வீட்டார் வியாபார நண்பர்கள் போன்றவர்களிடம் மேற் கொள்ள வேண்டிய தாஃவா பணி குறித்த கருத்துகளை நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தபோது இடையிடையே வலியுறுத்திப் பேசினார்.

மாநிலப் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது பேசுகையில் 'பொதுக்குழுவில் மாநில நிர்வாகிகளாக பதினோரு பேர் அறிவிக்கப்பட்டிருந்தபோதும் பத்து நிர்வாகிகள் மட்டுமே அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் வெளிநாட்டு தொடர்புள்ளவர்கள் நிர்வாகத்தில் இருப்பது அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு ஜித்தா மண்டலத்தில் ஜமாத்திற்காக பல ஆண்டுகளாக பாடுபட்ட முத்துப்பேட்டை முஹம்மது ஷிப்லியை மாநிலச் செயலாளர்களில் ஒருவராக தேர்ந்தெடுத்து அவரிடம் வெளிநாட்டுத் தொடர்பை வழங்க தற்போதையை நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது'' எனக் கூறி 'இதனை ஒப்புக் கொள்கிறீர்களா?'' எனக்கேட்டார். 'அல்லாஹு அக்பர்'' என்ற தக்பீர் முழக்கத்துடன் செயற்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர்.

'தாஃவா பணிகளில் சிறந்து விளங்கும் மாவட்ட அமைப்புகளுக்கு ரூ. 30 000 மதிப்பிலான - மாவட்ட நிர்வாகம் விரும்பும் தாஃவா தொடர்பான பொருட்களும் கிளை அமைப்புகளுக்கு ரூ. 15 000 மதிப் பிலான தாஃவா தொடர்பான பொருட்களும் மாநிலத் தலைமையால் வழங்கப்படும்'' என தாஃவா பணிகளை அதிகப்படுத்துவதற்காக மாநில நிர்வாகம் முடிவு செய்த திட்டத்தை மாநிலத் தலைவர் எம்.ஐ.சுலைமான் அறிவித்தார். அதேபோல் இரத்த தானத்தை ஊக் குவிக்கும் வகையில் மாவட்ட அளவில் இரத்த தானத்தில் முதலிடம் பிடிக்கும் முதல் மூன்று மாவட்டங்களுக்கு முறையே ரூ. 15 000 ரூ. 10 000 ரூ. 5000 என்றும் கிளை அமைப்புகளில் ஒரே முகாமில் 100 பேர் இரத்ததானம் செய்தால் அக்கிளைக்கு டிஎன்டிஜே ஷீல்டு' வழங்கப்படும்'' என்றும் மாநிலச் செயலாளர் சாதிக் அறிவித்தார். இந்த பரிசு தரும் அறிவிப்புக்களைக் கேட்ட செயற்குழு உறுப்பினர்கள் அல்லாஹு அக்பர்' என்று கூறி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

'மாதத்திற்கு ஒருமுறை மாவட்ட நிர்வாகம் கிளையின் வரவு - செலவு கணக்குகளை கேட்டுப் பெறவேண்டும். இதே போன்று மாவட்ட நிர்வாகம் வரவு - செலவு கணக்குகளை மாநில நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். மாநில நிர்வாகம் வரவு - செலவு விபரங்களை மாநிலப் பொதுக்குழுவின்போது சமர்ப்பிக்கும். இது பொருளாதர விஷயத்தில் ஜமாஅத்தின் தூய்மையை நிரூபிப்பதாக அமையும்'' எனப் பொருளாதார ஒழுங்குகள் குறித்து மாநிலப் பொருளாளர் சையத் இப்ராஹிம் விளக்கினார்.

மாநில நிர்வாகிகளின் உரைகளைத் தொடர்ந்து செயற்குழு உறுப்பினர்கள் மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் குறை நிறைகளைச் சொல்ல அனுமதிக்கப்பட்டனர். வரிசையாக மேடைக்கு வந்த மாவட்டப் பொறுப்பாளர்கள் மாநிலத் தலைமை மீது இருக்கும் குறைகளை எடுத்துக் கூறியும் ஜமாஅத்தின் பல்வேறு பணிகளில் புதிய ஆலோசனைகளையும் வழங்கினர்.

செயற்குழு உறுப்பினர்களால் முன் வைக்கப்பட்ட குறைகளை கவனமாக குறிப்பெடுத்துக் கொண்ட மாநில நிர்வாகிகள் வரும் காலங்களில் அனைத்துக் குறைகளும் நிவர்த்தி செய்யப்படும் என்றும் தகுதியான ஆலோசனைகளையும் செயல்படுத்த தலைமை முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்ததைத் தொடர்ந்து புதிய மாற்றங்களையும் தாஃவா மற்றும் சமுதாயப் பணிகளில் புதிய வேகத்தையும் எதிர்பார்த்தபடி செயற்குழு உறுப்பினர்கள் புதிய உத்வேகத்தோடு கலைந்து சென்றனர். பல்வேறு முக்கியத் தீர்மானங்களும் இம் மாநிலச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டன.



செயற்குழு தீர்மானங்கள்





தீர்மானம் - 1


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பல்வேறு கட்டப் போராட்டங்களுக்கு பின் தமிழக அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை சட்டமாக அறிவித்த பின்பும் இன்றுவரை இடஒதுக்கீட்டின் பலன் முழுமையாக முஸ்லிம் சமுதாயத்திற்கு கிடைக்கவில்லை. இடஒதுக்கிட்டிற்கான சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு 3.5 சதவிகித இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அனைத்துத் துறைகளிலும் முஸ்லிம்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. எனவே இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசுத்துறை பொதுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை ஆகியவற்றில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை எத்தனை? இதில் 3.5 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து தமிழக அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும். மாறாக வெள்ளை அறிக்கை வெளியிடாமல் தமிழக அரசு கடந்த காலங்களைப்போல் காலந்தாழ்த்துமேயானால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தி.மு.கவிற்கு தவ்ஹீத் ஜமாஅத் அளித்த ஆதரவை மறுபரிசீலனை செய்யும் சூழ்நிலை ஏற்படும் என இச்செயற்குழு தி.மு.க அரசை எச்சரிக்கிறது.



தீர்மானம் - 2


கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவோம் என தேர்தல் அறிக்கையில் வாக்களித்ததோடு தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் இது குறித்து காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பேசிவந்தன. இது ஒருபுறமிருக்க சச்சார் கமிட்டி முஸ்லிம்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை தெளிவாக படம் பிடித்து காட்டி முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது அவசியம் என மத்திய அரசுக்கு பரிந்துரையும் செய்தது. இனியும் இடஒதுக்கீடு வழங்காமல் முஸ்லிம்களை ஏமாற்ற நினைத்தால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்கனவே அறிவித்தபடி 4-11-08 அன்று தமிழகத்திலுள்ள தென்னக ரயில்வே அலுவலகங்களின் முன்பு தமிழகம் தழுவிய மாபெரும் சிறைநிரப்பும் போராட்டத்தை நடத்தும் என இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம் - 3


முஸ்லிம்களுக்கு கல்விக்கடன் சிறுதொழில் கடன் போன்றவற்றை வழங்கும்போது வட்டியில்லா முறையிலேயே கடனுதவி வழங்கப்பட வேண்டும் என்கிற முஸ்லிம்களின் நெடுநாளைய கோரிக்கையை மத்திய - மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று இச்செயற்குழு மத்திய - மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறது. மேலும் சில மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு கடன் உதவி வழங்கும்போது அதற்குண்டான வட்டித் தொகையை மாநில அரசே செலுத்துகிறது. இதை முன்மாதிரியாகக் கொண்டு தமிழக அரசும் தமிழக முஸ்லிம்களுக்கு கடனுதவி வழங்கும்போது அதற்குரிய வட்டியை தமிழக அரசே செலுத்த வேண்டும் என இச்செயற்குழு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 4


இந்திய முஸ்லிம் சமுதாயத்தை களங்கப்படுத்தியும் காயப்படுத்தும் வகையிலும் முஸ்லிம் தீவிரவாதிகள்' இஸ்லாமிய பயங்கரவாதம்' என்பது போன்ற கண்டனத்திற்குரிய சொல்லாடலை பயன்படுத்தி முஸ்லிம் சமுதாயத்தின் மீது தீவிரவாத முத்திரை குத்தும் நோக்கத்திலும் பத்திரிக்கை தர்மத்தை காலில் போட்டு மிதித்து சமூக நல்லிணக்கத்திற்கு வேட்டுவைக்கும் இந்திய ஊடகங்களை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. அதோடு சமீபத்தில் முஸ்லிம்களை இழிவுபடுத்தும் நோக்கில் செய்து வெளியிட்ட இந்தியா டுடே இதழை முஸ்லிம் மக்கள் மட்டுமல்லாமல் அனைத்து சமுதாயத்திலுள்ள நடுநிலையாளர்களும் புறக்கணிக்க வேண்டும் என்றும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 5


அடிப்படை உரிமைக்ளுக்காக போராடும் முஸ்லிம் மக்கள் மீது காவல்துறையினர் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருவது தமிழகம் முழுவதும் பரவலாக நடைபெற்று வருகிறது. நியாயத்திற்காக போராடும் முஸ்லிம்கள் மீது பொய்வழக்கு போட்டு சிறையில் அடைத்து அச்சுறுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்வது சட்டத்திற்கு புறம்பான செயல்களில் தமிழக காவல்துறை உடனடியாக நிறுத்தாவிட்டால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று காவல்துறையை எச்சரிக்கிறது.



தீர்மானம் - 6


முஸ்லிம் சமுதாயம் மேம்பாடு அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட மதுரை வக்ஃபு கல்லூரியில் பல ஆண்டு காலமாக தற்காலிக விரிவுரையாளர்களாக பணியாற்றிவரும் முஸ்லிம்களை புறக்கணித்து விட்டு சுயநல ஆதாயங்களுக்காக தகுதியில்லாத கல்வி நிலையிலும் அனுபவத்திலும் மேற்படி விரிவுரையாளர்களைவிட பின்தங்கிய நிலையிலுள்ள முஸ்லிமல்லாதவர்களை வக்ஃபு வாரியக் கல்லூரியில் நிரந்தரப் பணியாளர்களாக நியமனம் செய்ய முடிவெடுத்திருக்கும் மதுரை வக்ஃபு வாரியக் கல்லூரி நிர்வாகம் மற்றும் வக்ஃபு வாரியத் தலைவரை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. தமிழக அரசு விரிவுரையாளர்கள் நியமன விவகாரத்தில் தலையிட்டு கல்வித் தகுதி அனுபவம் பணி மூப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முஸ்லிம் களை நியமிக்க ஆவண செய்ய வேண்டும் எனவும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் - 7


தமிழகமெங்கும் பரவலாக வக்ஃபு சொத்துக்கள் அரசியல்வாதிகளாலும் தனி நபர்களாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனால் வக்ஃபு சொத்துக்கள் முஸ்லிம்களுக்கு பயன்படாமல் போகிறது. இத்தகைய வக்ஃபு சொத்துக்களை மீட்காமல் அலட்சியம் காட்டி வரும் வக்ஃபு வாரியத்தை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தீர்மானம் - 8


தமிழக சிறைகளில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக தண்டனைக் கைதிகளாக இருந்துவரும் முஸ்லிம் சிறைவாசிகளை எதிர்வரும் அண்ணா பிறந்தநாளின்போது விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 9


தமிழக அரசிடம் உலமா ஓய்வூதியம் கோரி நிலுவையிலிருந்த 200 விண்ணப்பதாரர்களுக்கு உலமா ஓய்வூதியம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து 2400 உலமாக்களுக்கு ரூபாய். 750 வீதம் வாழ்நாள் முழுவதும் இனி ஓய்வூதியம் கிடைக்கும். இதற்காக தமிழக அரசை இச்செயற்குழு பாராட்டுகிறது. அதேசமயம் தகுதியுள்ள ஏனைய உலமாக்களுக்கும் ஓய்வூதியம் கிடைக்க. வழிவகை செய்ய வேண்டும் எனவும் இச்செயற்குழு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் - 10


இந்தியத் திருநாட்டின் அரசியல் சட்ட மாண்புகளுக்கும் லட்சியங்களுக்கும் களங்கம் ஏற்படுவதைக்கூட பொருட்படுத்தாமல் இந்தியக் குடிமக்களின் உணர்வுகளுக்கு எதிராக அமெரிக்காவுடன் மத்திய அரசு அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்தியாவின் பொருளாதாரம் வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றின் மீது அமெரிக்காவிற்கு மேலாதிக்க உரிமையை வழங்குவதற்கான முன் ஏற்பாடே என்று இச்செயற்குழு கருதுகிறது. இதனால் அமெரிக்காவின் வல்லாதிகம் இந்தியாவின் மீது ஏற்பட வழிவகுத்த பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தீர்மானம் - 11


புதுவை யூனியன் பிரதேச முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல ஆண்டுகளாக போராடி வருகிறது. புதுவை காஙகிரஸ் அரசு முஸ்லிம்களுக்கு 6.1 சதவிகித தனி இட ஒதுக்கீட்டிற்கான தீர்மாத்தை புதுவை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய பின்பும் தனி இடஒதுக்கீடு வழங்காமல் புதுவை முஸ்லிம்களை ஏமாற்றி வருகிறது. இது விஷயத்தில் புதுவை காங்கிரஸ் முதல்வர் போர்க்கால அடிப்படையில் தனி இடஒதுக்கீடு கிடைக்க விரைந்து செயலாற்ற வேண்டும் என புதுவை முதல்வருக்கு பலமுறை சுட்டிக்காட்டியும் ஒரு முயற்சியும் எடுப்பதாகத் தெரியவில்லை. ஆகவே எதிர்வரும் புதுவை சட்டமன்ற குளிர் காலக் கூட்டத்தொடரின்போது புதுவை சட்ட மன்றத்தை முற்றுகையிட்டு மாபெரும் உரிமைப் போராட்டத்தை நடத்துவதென இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம் - 12


இந்துத்துவா வெறியர்களால் 450 ஆண்டுகால பாபர் மஸ்ஜித் தரைமட்டமாகப்பட்டு 16 ஆண்டுகள் கழிந்து விட்ட பின்பும் பாபர் மஸ்ஜித் வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. எனவே பாபர் மஸ்ஜித் வழக்கு விரைந்து முடிக்கப்பட வேண்டும் என இச்செயற்குழு மத்திய அரசு மற்றும் உச்சநீதி மன்றத்தையும் கேட்டுக்கொள்கிறது.


தீர்மானம் - 13


நாட்டில் நடைபெறும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இந்திய குடிமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளை விசாரணை அமைப்புகள் கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மேலும் இந்திய புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து இத்தகையை அசம்பாவித சம்பவங்கள் இனியும் நிகழாதவாறு எச்சரிக்கையாக செயலாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதோடு மனித நேயத்திற்கு எதிரான குண்டு வெடிப்பு சம்பவங்களை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தீர்மானம் - 14


இதுவரை நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களில் மும்பை கோவை அக்ஷர்தம் ஆகிய தாக்குதல் சம்பவங்களில் மட்டும்தான் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ளனர். ஆனால் நாட்டில் நடந்த பெரும் பாலான குண்டு வெடிப்புகளில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே மத்திய அரசு இத்தகைய சம்பவங்களில் எந்த இயக்கத்தை அல்லது மதத்தை சார்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருந்தாலும் அதை கண்டு பிடித்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என இச்செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் - 15


குஜராத் மாநிலம் சூரத் அஹமதாபாத் ஆகிய நகரங்களில் குஜராத் மாநில அரசே வெடிக்காத குண்டுகளை செட்டப் செய்து அதைக் கண்டுபிடிப்பது போன்று நாடகம் நடத்தி பொதுமக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது. இது சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் செயலாகும். இந்த வெடிகுண்டு சம்பவங்களில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க மத்திய அரசு சி.பி.ஐ. விசாரணை வைக்க உத்தரவிட வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 16


முஸ்லிம் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகைக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து மாநில அரசுகளுக்கு வழங்கி வருகிறது. ஆனால் மாநில அரசு இது குறித்த நடைமுறைகளில் போதிய கவனம் செலுத்தாததால் முஸ்லிம் மாணவ மாணவிகள் இந்த உதவித் தொகையை பெற முடியாத சூழ்நிலையே உள்ளது. இது விஷயத்தில் தமிழக அரசு உடனே தலையிட்டு சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டுக் கழகத்திற்கு அறிவுறுத்தி முஸ்லிம் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

செய்தி : TNTJ இணைய தளம்

இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு

இந்தியாவில் 60 வது சுதந்திரத்தைக் கொண்டாடுகின்ற இவ்வேளையில் இந்திய சுதந்திரத்திற்கு தனது சதவிகிதத்தையும் மிஞ்சும் விதத்தில் உயிர்களையும், உடமைகளையும் தியாகம் செய்த இஸ்லாமிய சமுதாயத்தின் தியாகத்தை மறந்திருந்தாலும் மன்னித்திருக்கலாம்... ஆனால் பாவிகள் திட்டமிட்டே அல்லவா மறைத்திருக்கிறார்கள்!

வெள்ளையனுக்கு வெண் சாமரம் வீசியர்கள் சுதந்திரப் போராட்ட தியாகிகளைக் காட்டிக் கொடுத்தவர்கள், அந்நியனுக்கு அடிமைச் சேவகம் செய்தவர்கள் எல்லாம் இன்று ஆட்சிக் கட்டிலும், அதிகார இடங்களிலும் அமர்ந்து கொண்டு சுதந்திரத்திற்கு தங்கள் எதிர்கால சந்ததியினரின் நலன்களை அர்ப்பணித்த சமுதாயத்தை அடக்கியாகின்ற அவலம் இங்குமட்டும் சுதத்திரத்திற்கு வாளேந்திய சமுதாயம் வாழ்வுரிமை கேட்டு வீதியில் நிற்கும் அவலம் இங்கு மட்டுமே.

கிழக்கிந்திய கம்பெனிக்கு கிஸ்தி வசூ­த்து தந்தவர்கள் நினைக்கலாம் ஆதவனை கரங் கொண்டு மறைத்திவிடலாம் என்று, ஆனால் ஆயிரம் கரம் கொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. இந்திய மண்ணின் கடைசி இஸ்லாமியர் இருக்கும் வரை இந்தியாவின் விடுதலைக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய அரும்பணிகள் மறையாது.

(நன்றி) மறந்தவர்களுக்கு நம் சமுதாயத்தின் தியாகங்களை சற்றே நினைவூட்டுவோம்.

மாவீரன் திப்பு சுல்தான்:

''ஆயிரம் ஆண்டுகள் அடிமையாய் வாழ்வதை விட சமருக்கு நின்று சாய்வதே சிறந்தது!'' என்று அந்த மாவீரன் திப்புசுல்தான் தென்னகத்தில் 5 பெரும் போர்களில் வெள்ளையர்களை படுதோல்வி அடையச் செய்து லி ஓட ஓட விரட்டினார். மே.4ம் தேதி 1799ல் ஸ்ரீரங்கப் பட்டிணத்தில் சூழ்ந்து கொண்டு துரோகிகளை விலை கொடுத்து வாங்கி மாவீரன் திப்புவை வெள்ளையர்கள் கொன்றார்கள். அந்த மாவீரன் இந்த நாட்டில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இன்று மிஞ்சமிருக்க லி அவனது வாழ்க்கை வரலாற்றைக் கூட இந்தப் பாவிகள் 'இது ஒரு கற்பனைக் கதை' என்ற வரிகNள்hடு தான் தொலைக்காட்சியில் வெளியிட்டார்கள். எத்தனை பெரிய துரோகம்?


பேகம் ஹஜ்ரத் மஹல்:

டெல்லியை ஆண்ட ஹஜ்ரத் பேகம் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய முஸ்லிம் பெண்மணியாவார். அவருக்கு அன்றைய ஆட்சியிலிருந்த எந்த ஒரு இந்து மன்னனும் உதவவாததால், தன் நாட்டை இழந்து இமயத்தின் அடிவாரக் காடுகளில் தன் பத்து வயது மகனுடன் அநாதையாய் அலைந்து, வீர மரணம் அடைந்தாள் அந்த வீரத்தாய்! இதை எப்படி மறந்தார்கர்கள்? (மறைத்தார்கள்!)


அஸ்வ குல்லா கான்:

பகத்சிங்கை அறிந்துள்ள இன்றைய சமுதாயம் அன்று அவனுடன் தூக்கி­டப்பட் மற்றொரு மாவீரன் அஸ்வ குல்லா கானை ஏன் மறந்தது... இல்லை மறைத்தது?


வேலூர் சிப்பாய்க் கலகம்:

சுதந்திரப் போராட்டத்தைக் கூட முஸலிம்கள் செய்தால் கலகம் என்று வரலாற்றுப் புரட்டு செய்யும் பாவிகளே, 1857 சிப்பாய்க் கலகப் புரட்சிக்கு வித்திட்ட மௌலவி அஹமது ஷாவின் தலைமையில் போராடிய சிப்பாய்களை பீரங்கி வாயில் வைத்து பிளந்து, அகழியில் வீசியவர்களே! இந்த தியாகத்தைக் கூடவா மறந்துவிட்டீர்கள்?


மாவீரன் கான் சாஹிப்:

மதுரையைச் சேர்ந்த மருதநாயகம் பிள்ளையாய் இருந்தும், பின்னர் யூசுப் கான் சாஹிபாக மாறிய வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பணமாகத் திகழ்ந்த யூசுப் கான் சாஹிப் தூக்கிலிடப்பட்ட பிறகும் நிம்மதியாய் உறங்க முடியாத வெள்ளையர்கள், அவனது உடலை தோண்டி எடுத்து தலைவேறு, உடல் வேறாக பிரித்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று அடக்கினார்கள் என்றால் எந்த அளவுக்கு வெள்ளையர்களை எதிர்த்து அந்த மாவீரன் அன்று போராடி இருப்பான் என்று சிந்தித்துப் பாருங்கள்! மதுரை சம்மட்டிபுரத்தில் அந்த மாவீரன் வாழ்ந்ததற்கான அடையாளமாக அவனது அடக்கஸ்தலம் இருக்க, இந்த மாவீரனை நினைவூட்ட ஒரு நடிகன் தேவைப்படுகிறான் என்றால் எத்தனை வேதனைக்குரிய விஷயம்.

மாப்பிளா மார்கள் போராட்டம்:


1921ல் வெள்ளையனுக்கு எதிராக கிலாபத் இயக்கம் கண்ட 100க்கும் அதிகமான மாப்பிளாமார்கள் கேரளாவின் திரலிருந்து ஏற்றி கோயம்புத்தூருக்கு கூட்ஸ் வண்டியில் அடைக்கப்பட்டு அனுப்பி கொல்லப்பட்டாகளே! அவர்கள் அடக்கஸ்தலங்கள் இன்று கோவை ரயில் நிலையில் அருகில் அவர்களின் வரலாற்றைச் சொல்லும் விதமாக உள்ளதே இதை எப்படி மறந்தீர்கள் (மறைத்தீர்கள்!)

காந்திஜி அழைப்பு விடுத்த கள்ளுக்கடை போராட்டத்திற்கு மதுரையில் கைதான 19பேரில் 10 முஸலிம்கள் தங்களின் 13 சதவிகிதத்தையும் தாண்டி, 50 சதவிகிதத்திற்கு அதிகமாகப் பங்கு கொண்டுள்ளனர் என்று குறிப்பிடத்தக்கது.

கப்பல் ஓட்டிய தமிழன் வா.உ.சி. லி கப்பல் வாங்கியதற்கு உதவிய தமிழன்?


அன்றைய வெள்ளையனின் கடல் ஆளுகையை எதிர்த்து சுதேசிக் கப்பல் விடுவதற்கு ஒரு டிரஸ்ட் அமைக்கப்பட்டது. கப்பல் வாங்குவதற்கு அன்றைய இந்திய நாளிதழில் பாராதியார் விளம்பரம் போட்டதற்கு வந்ததோ சில நூறு ரூபாய்களும், சில அனாக்களும்தான். ஆனால் கப்பலை வாங்குவதற்கு அன்றைய மதிப்பில் ரூ. 10 லட்சம் வழங்கிய ஹாஜி பக்கீர் முஹம்மதுவை மறந்து விட்டார்களா? இல்லை வேண்டும் என்றே மறைத்துவிட்டார்களா?

காந்திஜியின் பட்டங்கள், பதவிகள் புறக்கணிப்பு போராட்டம்

அன்றைய வெள்ளையன் ஆட்சியில் 13% இடஒதுக்கீட்டில் இருந்த முஸ்­ம் சமுதாயம் காந்திஜியின் பட்டங்கள், பதவிகள் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. கான் சாஹிபிலிருந்து, காயிதே மில்லத் வரை 90% அதிகமானோர் தங்கள் பட்டங்கள் பதவிகளைத் துறந்தனர். அன்று பட்டங்கள் பதவிகளைத் துறக்காமல் இருந்திருந்தால், இன்று இடஒதுக்கீடு கேட்டுப் போராடும் அவல நிலை இருந்திருக்காதே!

இந்திய விடுதலைப் போரில் உலமாக்களின் பங்கு

இந்திய விடுதலைப் போரில் உலமாக்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்திய விடுதலைப் போரில் தங்கள் வழிபாட்டுத் தலங்களைக் கூட வெள்ளையனுக்கு எதிராகப் பயன்படுத்திய ஒரு சமுதாயம் உண்டென்றால், அது இஸ்லாமிய சமுதாயம்தான்.


வெள்ளிக் கிழமை ஜூம்மா மேடைகள் எல்லாம் வெள்ளையனுக்கு எதிராக போர்ப் பரணி பாடின.. ஜூம்மா மேடைகளில் உரமேற்றியதன் விளைவு வீரத்துடன் இந்த சமுதாயம் வெள்ளையனை எதிர்த்துப் போராடியது. வெள்ளையனின் உடை கலாச்சாரம், மொழி போன்றவை ஹராம் என பத்வாக்கள் அளித்தனர். வெள்ளையனின் அதிகார வரம்புக்கு உட்பட்ட நிலப்பரப்புகள் யுத்த பூமி (தாருல் ஹர்டி) என்பது போன்ற பத்வாக்கள் வழங்கப்பட்டன.


19ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய இஸ்லாமிய அறிஞராகத் திகழ்ந்த மௌலவி காசிம் அஹ்மத் நாளோத்வி 1885ல் இந்திய தேசிய காங்கிரஸில் முஸ்­ம்கள் உறுப்பினராகச் சேர வேண்டும் என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். வெள்ளையனை நாட்டை விட்டு விரட்டுவது மார்க்கக் கடமை என்ற அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட பத்வாக்களை (மார்க்கத் தீர்ப்புக்களை) திரட்டி நுஸ்ரத்தூல் அஹ்ரார் (விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான உதவி) என்ற பெயரில் நூல் ஒன்றையும் வெளியிட்டார்.

காந்திஜி நடத்திய அஹிம்சைப் போராட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் பட்டியலில் ஒரு பகுதி:


1. காதிர் முஹைத்தீன் மரைக்காயர் (பர்மா, கிலாபாத், ஒத்துழையாமை)
2. மி.இ. முஹம்மது அப்துல் காதர் சாஹிபு ி தென்காசி (கிலாபத், அந்நியத் துணி எரிப்பு, ஒத்துழையாமை இயக்கம்)
3. அப்துல் ஹமீதுகான் 1932ல் சென்னை மேயராக பணியாற்றியவர் (சுதந்திரப் போராட்டத்திற்காக சென்னை சட்டசபையில் குரல் கொடுத்தார்.)
4. முகமதலி சேலம் (கள்ளுக்கடை மறியல்)
5. பி.என். அப்துல் கபீர் தாராபுரம் (வில்லுப்பாட்டு மூலம் தேசப் பற்றை வளர்த்தார், கிலாபத்திலும் கலந்து கொண்டார்)
6. பண்டிட் அப்துல் மஜீத் பளைக்குளம் (கிலாபத்)
7. கலிபுல்லாஹ் திருச்சி (கிலாபத்)
8. நூர்மல் சென்னை (பகத்சிங் படத்தை அடையில் வைத்து விற்றதாக கைது செய்யப்பட்டு, 18-1 அச்சு சட்டப்படி வழக்குத் தொடரப்பட்டது.)
9. அப்துல் ஹமீது
10. மௌலானா அப்துல் காதர்

1973ம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதில் நேதாஜியின் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸலி­ம்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் விபரம் வருமாறு:

பள்ளப்பட்டி மனிமொழி மவ்லானா
இராஜகிரி அப்துல்லா
இளையான்குடி கரீம் கனி
திருப்பத்தூர் அபூபக்கர்
திருப்பத்தூர் தாஜிதீன்
அத்தியூத்து அபூபக்கர்
பக்கரி பாளையம் அனுமன் கான்
சென்னை அமீர் ஹம்சா
சென்னை ஹமீது
செங்குன்றம் கனி
வண்ணாரப்பேட்டை ஹயாத்கான்
புதுவலசை இபுராஹிம்
பார்த்திபனூர் இபுராஹிம்
வனரங்குடி இபுராஹிம்
இளையான்குடி அப்துல் கபூர்
மேலூர் அப்துல் ஹமீது
சோழசக்கர நல்லூரி அப்துல் ஜப்பார்
தத்தனனூர் அப்துல் காதர்
பட்டுக்கோட்டை அப்துல் காதர்
திருப்பூர் அப்துர் ரஜாக்
காரிவிப்பட்டினம் அப்துல் மஜித்
குருவம் பள்ளி அப்துல் மஜீத்
கண்ணாத்தாள் பட்டி அப்துல் முத்தலிபு
லெப்பைக் குடிகாடு அப்துல் சலாம்
ராம்நாடு அப்துல் வஹாப்
மானாமதுரை அப்துல் பாசித்
திரிவிடைச் சேரி அப்துல் வஹிப்
அத்தியூத்து இபுராஹிம் ô
சென்னை ஜாபர் ஹக்கிமி
சிங்கம் மங்களம் ஜெய்னுல் ஆபிதீன்
திருப்பத்தூர் காதர் பாட்ஷா
புதுவலசை முஹம்மது லால் கான்
பார்த்திபனூர் கச்சி மைதீன்
தஞ்சை முஹம்மது தாவூது
அறந்தாங்கி முஹம்மதுசெரிபு
திருச்சி வரகனேரி முஹம்மது சுல்தான்
வடபழனி சென்னை முஹம்மது யூசுப்
தூத்துக்குடி முஹம்மது கல்லுரிஜனி
சிவகங்கை முஹம்மது இபுராஹிம்
சென்னை முஹம்மது உமர்
மதுரை மொய்தீன் பிச்சை
அம்மன்சத்திரம் முஹம்மது மீராசா
திருப்பத்தூர் பீர் முஹம்மது
கும்பகோணம் ரஹ்மத்துல்லா
குடியத்தம் நஜீமுல்லாஹ்
கிருஷ்ணகிரி தாவூத் ஷாயிபு
இராமநாதபுரம் சையது கனி
பரகப்பேட்டை தாஜிதீன்
மன்னர்குடி சிக்கந்தர்
கம்பம் சிக்கந்தர்
முதுகுளத்தூர் சுல்தான்
கும்பகோணம் சுல்தான்
இராமநாதபுரம் தாஜிதீன்

நன்றி : TNTJ இணைய தளம்

பெண்களை அடிப்பது ஆண்மைக்கு அழகா?

மக்களுக்கு செய்திகளைத் தெரிவிக்கும் ஊடகத் துறையில் பாதிக்கு மேல் செய்திகள் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைத் தாங்கிய செய்திகளாகத் தான் உள்ளன. இதில் பத்திரிகைகள், தொலைக்காட்சி என்ற வித்தியாசமில்லாமல் இரண்டிலுமே சம அளவு பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தெரிவிக்கும் செய்திகள் இடம் பெறுகின்றன.

தொலைக்காட்சிகளில் சற்றுக் கூடுதலாக செய்திகள் மட்டுமின்றி நெஞ்சங்களைப் பதற வைக்கும் படங்களையும் பார்க்க முடிகின்றது. தினமும் பெண்களை ஆண்கள் கொடூரமான முறையில் அடித்துத் துன்புறுத்தும் வன் செய்திகளுக்கு ஊடகங்களில் பஞ்சமில்லை என்ற நிலை ஒரு புறம்; யதார்த்தமான இந்நிலையை மிகவும் மிகைப்படுத்தி உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் சின்னத்திரைகளில் காட்டி, பெண்களை சீரியல்களின் அடிமைகளாக மாற்றி வரும் கொடுமையும் நடந்து வருகின்றது.

மிகவும் கேவலத்திற்குரிய விஷயம் யாதெனில் மக்கள் மத்தியில் அறிவு ஜீவிகள் என்ற போர்வையில் பொது வாழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பிரபலங்கள் கூட மனைவியை அடித்துத் துன்புறுத்தும் குற்றச்சாட்டி-ருந்து விதிவிலக்கு பெறவில்லை. இறை நெறியான இஸ்லாத்தை வாழ்வு நெறியாகக் கொள்ள வேண்டிய முஸ்-ம்களில் சிலரும் மனைவிகளை அடிப்பது மார்க்கத்தில் தவறா? என்று அறிவில்லாமல் வினவுகின்றனர்.

குடும்ப வாழ்க்கையில் சச்சரவுகள் ஏதும் எழா வண்ணம் அமைதியாக வாழ்வதற்கு அனைத்து வழி முறைகளையும் வகுத்துத் தந்த இஸ்லாமிய மார்க்கம் இவ்வமைதி நெறிகளையும் மீறி மனிதன் தவறிழைத்து குடும்ப வாழ்வில் சச்சரவுகளை ஏற்படுத்திக் கொண்டால் அதை சுமுகமான முறையில் களைவதற்கு வழிமுறைகளைக் கூறுகின்றது. பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:34)

பிணக்கு ஏற்பட்டால் இஸ்லாம் எடுத்த எடுப்பிலேயே அடிக்கச் சொல்லவில்லை. அழகான வழி முறைகளைக் கூறுகின்றது.
அவை:
1. அறிவுரை கூறுவது.
2. படுக்கையி-ருந்து தற்கா-கமாக நீக்குவது.
3. அடிப்பது.

எடுத்து எடுப்பிலேயே அடிக்க அனுமதிக்காமல் அதற்கு முன் இரு வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று போதிக்கின்ற இஸ்லாம் அப்படிக் கடைப்பிடிக்க வேண்டிய நெறி முறைகளையும் விளக்குகின்றது. கணவனுக்கு மனைவியின் மீது உள்ள கடமையைப் பற்றிக் கேட்கப்ட்டது. "நீ உண்ணும் போது அவளுக்கு உணவளி! நீ உடுத்துவது போல் அவளுக்கு ஆடையை அவளுக்கு வழங்கு! முகத்தில் அடிக்காதே! கேவலமாகத் திட்டாதே! வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்கும்படி நடக்காதே!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்: அபூதாவூத் 1830)

எந்தச் சந்தர்ப்பத்திலும் மனைவியின் முகத்தில் அடிப்பதையும் காயம் ஏற்படும்படி அடிப்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிக வன்மையாகத் தடுத்துள்ளார்கள். (நூல்: புகாரி 1294, 1297)

இவ்வளவு தெளிவான வழி முறைகளைப் பேண வேண்டிய முஸ்-ம்களில் சிலரும் மனைவியை அடித்து நோவினை செய்கின்றனர். அடிப்பது தான் ஆண்மைக்கு (?) அடையாளம் என்று நினைத்து விட்டார்கள் போலும். மனைவி என்பவள் உடல்ரீதியாகப் பலவீனமானவள் என்பதால் அவளுடைய சிலகுணங்களைப் பிடிக்கவில்லை என்றாலும் பிடித்த குணங்களைக் கொண்டு திருப்தி கொண்டு, மன நிறைவோடு வாழ்வதில் தான் ஆண்மை உள்ளது என்கிற ரீதில் தான் இஸ்லாமிய போதனைகள் உள்ளன.

ஒருவன் தன்னுடைய வாழ்வில் அதிக நேரத்தைக் குடும்பத்தில் தான் செலவிடுகின்றான் என்ற நிலையி-ருந்தும் தன்னுடைய குடும்பத்தாரிடம் நற்சான்று பெறுபவர் தான் உங்க ளில் நல்லவர் என்ற நபி (ஸல்) அவர்களின் உயர்தரமான போதனை இருந்தும் இவ்வாறு மனைவியிடம் கொடூரத்தை சிலர் காட்டுவதற்கு அவர்களின் மார்க்க அறியாமை தான் காரணம். இவ்வாறு அடித்துக் கொடுமைப் படுத்துவது மட்டுமின்றி குடும்ப வாழ்க்கையில் எழும் பல பிரச்சனைகளுக்கு இஸ்லாமிய மார்க்க ஞானமின்றி மார்க்கம் சொல்-த் தராத, மனித அறிவு ஏற்றுக் கொள்ளாத பல செயல்களில் ஈடுபட்டு அவை பத்திரிகைகளில் செய்திகளாக வந்து இஸ்லாத்தைக் களங்கப்படுத்தும் அவல நிலையை முஸ்-ம்களில் சிலர் செய்து வருகின்றனர்.

எனவே மார்க்க அறிஞர்கள் மற்றும் பிரச்சாரகர்கள் வெள்ளி மேடைகள் மட்டுமின்றி கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் தங்களுடைய நாவு மற்றும் எழுத்துக்களின் மூலமாக இஸ்லாம் கூறும் குடும்பவியலை, குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளி-ருந்து எடுத்துக் கூற வேண்டும். இது மட்டுமின்றி இது பற்றி ஞானமுள்ள பெண்மணிகள் தங்களுடைய அறிவை தங்களளவில் நிறுத்திக் கொள்ளாமல் அறியாத பெண்மணிகளுக்கும் எத்தி வைக்க வேண்டும். அத்தோடு மட்டுமில்லாமல் பத்திரிகைகள் இவ்வாறான செய்திகளை வெளியிடும் போது பெண்களே தங்களது எழுத்துக்களால் உண்மை போதனைகளை எடுத்துரைக்க வேண்டும். நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள் புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 9:71)

வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் அவன் வகுத்துத் தந்த போதனைகள் படி வாழச் செய்வானாக!

நன்றி : தீன்குலப் பெண்மணி மாத இதழ்

தேனீக்களின் அற்புதங்கள்

பனி மூட்டம், மேக மூட்டம் போன்ற பருவ நிலை மாற்றம் அல்லது இயந்திரக் கோளாறு போன்ற காரணங்களால் ஒரு விமானம் புறப்படுவதற்குக் கால தாமதம் என்று கேள்விப்பட்டிருக்கின்றோம். தேனீ படையின் தாக்குதல் காரணமாக சில நிமிடத் துளிகள் அல்ல, முக்கால் மணி நேரம் விமானம் கால தாமதம் என்று நாம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இந்த அதிசயம், அற்புதம் சென்னை விமான நிலையத்தில் மார்ச் 26ம் தேதி நடந்தேறியது.

தேனீப் படைத் தாக்குதல்

இது தொடர்பாக விமான நிலைய இயக்குனர், தினேஷ்குமார் இந்து நாளேட்டிற்கு அளித்த பேட்டியின் சாராம்சம் இதோ:

விமான நிறுத்தப் பாதை 31ல் ஜெட் விமானம் நின்று கொண்டிருக்கையில் அவரும், விமானத்தின் பைலட் கேப்டன் சந்திரசேகரனும் விமானத்தின் மூக்குப் பகுதியில் தேனீக்கள் மொய்த்துக் கொண்டிருந்ததைக் கண்டார்கள். ராட்சத உடலைக் கொண்ட ஜெட் விமான மூக்கின் முகப் பரிமாணமே தெரியாத வண்ணம் தேனீ படையினர் மொய்த்துக் கொண்டிருந்தனர். தேனீக்களைக் கொல்லக் கூடாது என்பதில் குறியாக இருந்த அந்த இரு அதிகாரிகளும், தேனீக்கள் பயணிகளைக் கொட்டி விடக் கூடாது என்பதிலும் கவனமாகச் செயல்பட்டனர்.

இங்கிருந்து கிளம்பி இந்தப் படை அடுத்த நிறுத்தத் தளத்தில் நிற்கும் விமானத்தில் போய் மொய்த்து விடுவதையும் அவர்கள் இருவரும் விரும்பவில்லை.

எனவே அவர்கள் தீயணைப்புப் படை வாகனங்களை வரவழைத்து உள்ளனர். தீயணைப்புப் படையினர் தண்ணீர் குழாய்கள் மூலம் வேக அழுத்தத்துடன் தேனீக்கள் மீது தண்ணீரைப் பாய்ச்சி அடித்துள்ளனர். தீயணைப்புப் படையினரின் நீரழுத்தத் தாக்குதலுக்கெல்லாம் தேனீப் படையினர் சற்றும் அசைந்து கொடுக்கவில்லை.

இந்தக் கட்டத்தில் பயணிகள் அனைவரும் விமானத்தின் பின் வாசல்கள் வழியாக விமானத்தில் ஏறும் படி பணிக்கப்பட்டனர்.

தீயணைப்புப் படையினருக்கு டாட்டா காட்டிய தேனீப் படையினர் கடுகளவு கூட நகரவில்லை. இறுதியாக விமானத்தை இயக்குவதைத் தவிர்த்து வேறு வழியில்லை என்றானதும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தி-ருந்து புறப்படுவதற்கான உத்தரவை கேப்டன் சந்திரசேகரன் பெற்றார்.

விமானம் ஓட்டுவதில் பலவிதமான சவால்களைச் சந்திப்பதில் சாதனை படைத்த சந்திரசேகர், விமானத்தைத் தரையி-ருந்து ஆகாயத்தை நோக்கிக் கிளப்பும் போது மேற்கொள்ளும் சாதாரண வேகத்திற்குப் பதிலாக சம வேகத்தில், சரித்திர வேகத்தில் விமானத்தைக் கிளப்பியுள்ளார்.

அந்தச் சரித்திர வேகத்தில் கூட தேனீப் படையினரில் சிலர் தான் நகர்ந்துள்ளனர். மற்றவர்கள் விமானத் துடன் ஆகாய மண்டலத்திற்குச் சென்று விட்டனர்.

இது இந்து நாளேடு மார்ச் 27ந் தேதி வெளியிட்ட வித்தியாசமான ஒரு செய்தியாகும்.

அல்குர்ஆன் கூறும் அறிவியல் அற்புதம்

இங்கே இந்தச் செய்தியை ஆள்வதற்கான பின்னணி என்ன? அறிவியல் கண்டுபிடிப்பை, அணுகுண்டு வெடிப்பைக் கண்டிராத, ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்தச் செய்தியை அல்குர்ஆன் சொல்- இருக்கின்றது என்றால் அது மனித மூளையில் உதித்த செய்தி அல்ல; அனைத்தையும் படைத்த ஓர் அற்புத சக்தியிடமிருந்து பிறந்த உண்மை ஒளிக்கதிர் என்பதைப் போட்டு உடைப்பதற்காகவே இந்தச் செய்தி இங்கே ஆளப்படுகின்றது. இப்போது திருக்குர்ஆனின் தித்திக்கும் தேனீ அத்தியாயத்திற்குள் நுழைவோம். அந்தத் தேனடையில் ஒழுகி வழியும் தேனான கருத்தைப் பருகி வருவோம்.

தேனடையின் தொழில் நுட்பமும் திட்பமும்

"மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளி-ருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!'' என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறு களி-ருந்து மாறுபட்ட நிறங்களை உடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது. (அல்குர்ஆன் 16:68,69)

இந்த வசனம் தேனீயின் வாழ்க்கையைப் பற்றிக் கூறுகின்றது.

பொதுவாக பூச்சிகள், புழுக்கள், விலங்குகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களின் வாழ்க்கை ரகசியங்கள், இரைக்கான ஆதாரங்கள், உறைவிடங்கள் அனைத்திலும் மனிதனை அதிர வைக்கும் எத்தனையோ அறிவியல் உண்மைகள் காணக் கிடைக்கின்றன. இவற்றில் தேனீ கட்டும் கூட்டில் என்று சொல்வதை விட இன்றைய அறிவியல் உலகம் அதிசயிக்கத்தக்க வகையில் தேனீக்கள் கட்டுகின்ற வீட்டில் பல அற்புதங்கள் புதைந்து கிடக்கின்றன.

தேன் கூட்டின் பலம்

ஒரு கட்டடப் பொறியாளர் இன்று கட்டடம் கட்ட வேண்டும் என்றால், அவருக்குக் கட்டடம் எப்படிக் கட்ட வேண்டும் என்று தெரிந்தால் மட்டும் போதாது. அந்த இடத்தில் பூகம்பம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளைக் கண்டறிந்து அதற்குத் தக்க கட்டடத்தை வடிவமைக்கும் கல்வியையும் கற்றிருக்க வேண்டும் என்று இன்றைய அறிவியல் உலகம் கூறுகின்றது. அதனால் இப்போது சிவில் இஞ்சினியரிங் படித்தவர்கள் இந்தப் படிப்பையும் சேர்த்துப் படித்து வருகின்றனர். இது பகுத்தறிவுப் பிராணி என்று தன்னைத் தானே கூறிக் கொள்ளும் மனிதன் ஒரு வீடு கட்டுவதற்காக எடுக்கும் அதிகப் பட்சமான பாதுகாப்பு நடவடிக்கை!

இதோ பாருங்கள்! ஈ என்ற ஓர் அற்பப் படைப்பு படைக்கின்ற அற்புதப் படைப்பையும் அது கொண்டிருக்கின்ற அறிவியல் படிப்பையும் பாருங்கள். அது எந்த மரத்தில் கூடு கட்டுவதாக இருந்தாலும் அந்த வழியில் புயல் காற்று வீசுமா என்று பார்த்துக் கொள்கின்றது. புயல் காற்று வரும் திசையில் வீடு கட்டுவது கிடையாது.

என்ன ஒரு அறிவாற்றல்! இப்போது தான் அல்லாஹ் தேனீக்குக் கூறிய "மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்!'' என்ற அந்த வார்த்தை எவ்வளவு அற்புதமாக அர்த்தப்படுகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.

பேயாட்டத்தில் பிய்யாத கூடு

தேனீக்கள் அவ்வாறு ஆய்வு செய்து கூடு கட்டி விட்டால் எந்தப் புயல் வீசினாலும் அந்தக் கூட்டைப் பிய்த்து விட முடியாது. தான் கட்டியிருக்கும் அந்தக் கம்பம், கிளை ஓயாத பேயாட்டம் ஆடினாலும் அந்தக் கூடு பிய்யாது, பிரியாது. இது தேன் கூடு பற்றி இன்றைய அறிவியல் கண்கூடாக நிரூபிக்கும் உண்மை நிரூபணமாகும். மழையில் கரையாத, புயல் அலையில் கலையாத இந்தத் தேன் கூட்டுக்கே இந்தப் பலம் இருக்கின்றது என்றால் அந்தத் தேனீக்களுக்கு எத்தனை பலம் இருக்கும் என்பதை உணர முடிகின்றது அல்லவா?

அதனால் தான் மனித மூக்கில் உட்கார்ந்து கொண்டு சாதாரண ஈ மனிதனிடம் விளையாட்டுக் காட்டுவது போல் ஜெட் விமானத்தின் மூக்கில் உட்கார்ந்து கொண்டு இந்தத் தேனீக்கள் தீயணைப்புத் துறையிடம் விளையாட்டுக் காட்டியிருக்கின்றது. இங்கு நாம் பார்க்க வேண்டிய விஷயம், தேன் அடையின், தேனீ படையின் பலத்தைத் தான்.

"மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்!'' என்று அல்லாஹ் கற்றுக் கொடுக்கும் அந்தக் கட்டடக் கலையின் அற்புதம் இந்தத் தேனீக்கள் மூலம் ஜெட் விமானத்தின் மூக்கில் அப்படியே அர்த்தப் படுவதைப் பார்க்கிறோம்.

இதி-ருந்து அல்குர்ஆன் கூறுகின்ற இந்த அறிவியல் அற்புதம் நூற்றுக்கு நூறு சரியாவதைப் பார்க்கின்றோம். இந்த வேதம் மனித் சொல் அல்ல! மந்திரச் சொல்லல்ல! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அற்புதச் சொல் என்று நம்மிடம் வேர் பிடித்த இந்தக் கொள்கை மேலும் நீர் பிடித்துக் கொள்கின்றது.

தேன் கூட்டின் தொழில் நுட்பம்

இதுவரை தேன் கூட்டின் பலத்தையும் அதன் திட்பத்தையும் பார்த்தோம். இப்போது அதன் தொழில் நுட்பத்தைப் பார்ப்போம்.

மனிதன் தான் தொழில் நுட்பத்தில் சிறந்தவன். வட்டம், அரை வட்டம், கால் வட்டம், சதுரம், செவ்வகம், முக்கோணம், அறுங்கோணம் போன்ற வடிவிய-ன் (ஏங்ர்ம்ங்ற்ழ்ஹ்) கணக்குகள் தெரிந்தவன். அந்தக் கணக்குகளைப் பின்புலமாகக் கொண்டு வானளாவ எழுந்து நிற்கும் அன்றைய தாஜ்மஹா--ருந்து இன்றை உலக வர்த்தக மையம் வரையிலான கட்டடங்களைக் கட்டத் தெரிந்த தொழில் நுட்ப நிபுணன்! பொறியியல் வல்லுனன் என்று பெயரெடுத்த இவன் கட்டடக் கலையில் தேனீயிடம் பிச்சை வாங்க வேண்டும்.

சதுரம் சதுரமாக ஒரு கூட்டைக் கட்டிக் கொண்டு சென்றால் சதுர அமைப்பில் தான் அதை முடிக்க முடியுமே தவிர அதைக் கூடு வடிவில் கொண்டு வர முடியாது.

அது போல் வட்டம் வட்டமாக ஒரு கூட்டைக் கட்டினால் அதில் ஓட்டைகள் ஏற்படும். அந்தக் கூட்டைப் பூர்த்தி செய்ய முடியாது. நான்கு வட்டங்களை சேர்ந்தாற் போல் வைத்துப் பார்த்தால் அவற்றின் இடையே ஒரு துண்டு விழுவதைப் பார்க்கலாம்.

ஆனால் தேனீக்கள் கட்டுகின்ற இந்தக் கூட்டின், தொழில் நுட்பம் மிக்க வீட்டின் வடிவமைப்பைப் பாருங்கள். ஓட்டை இல்லாமல், உடைசல்கள் இல்லாமல் கூடு வடிவில் உருவாக்கப் படுகின்றது. எப்படி? இதன் அறுங்கோண வடிவ அமைப்பு தான் இதற்குக் காரணம்!

இந்த அறுங்கோண வடிவத்திலான செங்கல்களைச் சேர்த்து இந்தக் கூட்டைக் கட்டினால் தான் ஓட்டை ஏற்படாமல் குடியிருப்பதற்குத் தக்கக் கூடாக அமையும். மலர்களில் மொண்டு, தன் வயிறுகளில் சுமந்து கொண்டு வந்து கொட்டுகின்ற தேன் சொட்டுக்களுக்கு உரிய பாதுகாப்பு வங்கியாக இருக்கும் வகையில் அறுங்கோண வடிவில் அமைக்கும் அறிவியல் அறிவு அதற்கு எப்படி வந்தது?

"மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்!'' என்று அல்லாஹ் கற்றுக் கொடுக்கும் வஹீயின் அடிப்படையில் தான் வந்தது.

நபிகளாரின் நற்குணங்கள்- தன்னடக்கம்

நான்கு எழுத்து படித்து, பணமும் அதிகாரமும் வந்து விட்டால் அவர்களிடம் இருக்கும் பெருமையும் ஆணவமும் கேட்க வேண்டியதில்லை. ஆனால் இவ்வுலகத்தில் சிறப்புமிக்க இறைத்தூதராக இருந்த நபிகளார் எந்தக் கட்டத்திலும் பெருமை கொண்டதில்லை. பணிவும் தன்னடக்கமுமே அவர்களிடம் வெளிப்பட்டது.

ஒரு முஸ்-மும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்-ம், "உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மேன்மையை அüத்தவன் மீது சத்தியமாக!'' என்று கூறினார். அந்த யூதர், "உலகத்தார் அனைவரை விடவும் மூசாவுக்கு மேன்மையை அüத்தவன் மீது சத்தியமாக!'' என்று கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்டு) அந்த முஸ்-ம் தன் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்து விட்டார். அந்த யூதர், நபி (ஸல்) அவர்கüடம் சென்று தனக்கும் அந்த முஸ்-முக்கும் இடையே நடந்ததையெல்லாம் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்-மை அழைத்து வரச் சொல்- அது பற்றி அவரிடம் கேட்டார்கள். அவர் விபரத்தைக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், "மூசாவை விட என்னைச் சிறப்பாக்கி (முத-டம் தந்து உயர்த்தி) விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் மறுமை நாüல் மூர்ச்சையாகி விடுவார்கள். நானும் அவர் களுடன் மூர்ச்சையாகி விடுவேன். நான் தான் முதலாவதாக மயக்கம் தெüந்து எழுவேன். அப்போது, மூசா (அலை), (அல்லாஹ்வுடைய) அர்ஷின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெüந்து விட்டிருப்பாரா, அல்லது அல்லாஹ் அவருக்கு மட்டும் விதி விலக்கு அüத்திருப்பானா என்று எனக்குத் தெரியாது'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-), நூல்: புகாரி (2411)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவரையும் அவரது நற்செயல் (மட்டும்) சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது (அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொக்கம் புகமுடியும்)'' என்று கூறினார்கள்.

மக்கள், "தங்களையுமா? அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "என்னையும் தான்; அல்லாஹ் (தனது) கருணையாலும் அருளாலும் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர'' என்று கூறிவிட்டு, "எனவே, நீங்கள் நேர்மையோடு (நடு நிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாக நடந்துகொள்ளுங்கள். உங்கüல் எவரும் மரணத்தை விரும்பிட வேண்டாம். ஒன்று அவர் நல்லவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதன் மூலம்) நன்மையை அதிகமாக்கிக் கொள்ளலாம். அல்லது அவர் தீயவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதால்) மனம் திருந்தக்கூடும்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-), நூல்: புகாரி (5673)

நன்மையில் முந்திச் செல்லுதல்

நபிகளார் எந்தக் காரியத்தை ஆர்வமூட்டினாலும் அதை, தாம் முத-ல் செய்பவர்களாக இருப்பார்கள். கட்சித் தலைவர்களாக இருக்கும் பலர் பத்திரிக்கைகளில் படம் வரவேண்டும் என்பதற்காகக் கேமரா முன் வந்து நின்று விட்டு மாயமாகி விடுவார்கள். ஆனால் எந்தக் காரியத்தை செய்யத் தூண்டினாலும் அதைச் செய்யும் முதல் நபராகவும் மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் நபிகளார் திகழ்வார்கள்.

பத்ர் போர் நடந்த நாட்களில் நாங்கள் மூன்று பேர் ஒரு ஒட்டகத்தில் செல்லும் நிலைமையில் இருந்தோம். அபூலுபாபா(ர-), அலீ (ர-) ஆகியோர் நபிகளாருடன் சேர்ந்திருந்தார்கள். (இருவர் பயணம் செய்ய, மூன்றாம் நபர் நடந்து வருவார். இவ்வாறு பயணத்தை வைத்திருந்தனர்) நபிகளார் நடந்து வரும் முறை வந்த போது இரு நபித்தோழரும், "நாங்கள் உங்களுக்காக நடக்கிறோம் (நீங்கள் ஒட்டகத்தில் அமர்ந்து வாருங்கள்)'' என்று கூறிய போது "நீங்கள் இருவரும் என்னை விட வ-மை வாய்ந்தவர்கள் இல்லை. மேலும் உங்களை விட நன்மையில் தேவையற்றவனாகவும் இல்லை'' என்று பதிலளித்தார்கள்.

(நூல்: அஹ்மத் 3706)

நபி (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று வணங்குவார்கள். ஆகவே நான், "ஏன் இப்படிச் செய்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே! தங்கüன் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்து விட்டானே?'' என்று கேட்டேன். அவர்கள், "நான் நன்றியுள்ள அடியானாக இருக்க விரும்ப வேண்டாமா?'' என்று கேட்டார்கள். (தம் வாழ்நாüன் கடைசிக் காலத்தில்) நபி (ஸல்) அவர்கüன் உடல் சதை போட்ட போது அமர்ந்து தொழுதார்கள். "ருகூஉ' செய்ய நினைக்கும் போது, எழுந்து (சிறிது நேரம்) ஓதுவார்கள். பிறகு, "ருகூஉ' செய்வார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ர-), நூல்: புகாரி (4837)

பாதுகாவலர்

தம் தோழர்களைப் பாதுகாக்கும் கேடயமாக நபிகளார் திகழ்ந்துள்ளார்கள். பிரச்சனைகள், சிக்கல்கள் தம் தோழர்களுக்கு வந்து விட்டால் அதை நிவர்த்தி செய்யும் விதமாக முத-ல் களத்தில் ஈடுபடும் மாபெரும் வீரராகவும் நபிகளார் திகழ்ந்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் (குணத்தாலும் தோற்றத்தாலும்) மக்கüலேயே மிகவும் அழகானவர்களாகவும் மக்கüலேயே அதிகக் கொடை குணம் கொண்டவர்களாகவும் மக்கüலேயே அதிக வீரமுடையவர்களாகவும் இருந்தார்கள்.

(ஒரு முறை) மதீனாவாசிகள் இரவு நேரத்தில் (எதிரிகள் படையெடுத்து வருவதாகக் கேள்விப்பட்டு) பீதியடைந்தார்கள். சப்தம் வந்த திசையை நோக்கி மக்கள் நடந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களை எதிர் கொண்டார்கள். சப்தம் வந்த திசையை நோக்கி மக்களுக்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் சென்று விட்டிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது கழுத்தில் வாளைத் தொங்கவிட்டபடி அபூதல்ஹா (ர-) அவர்களது சேணம் பூட்டப்படாத வெற்றுடலான குதிரையின் மீது அமர்ந்த வண்ணம், "பீதியடையாதீர்கள். பீதியடையாதீர்கள்'' என்று (மக்களைப் பார்த்துச்) சொன்னார்கள். பிறகு, "(தங்கு தடையின்றி) ஓடும் கடலாக இந்தக் குதிரையை நாம் கண்டோம்' அல்லது "இந்தக் குதிரை (தங்கு தடையின்றி) ஓடும் கடல்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ர-), நூல்: புகாரி (6033)
நல்ல வார்த்தைகள்

அடுத்தவரைக் கண்டிக்கும் போதோ அல்லது சாதாரணமாகப் பேசும் போதோ அருவருக்கத்தக்க வார்த்தைகளைப் பேசும் வழக்கமுள்ள தலைவர்கள் ஏராளம். பல கட்சிகளில் அருவருப்பாகப் பேசும் பழக்கமுடையவர்களை மாநிலப் பேச்சாளர்களாகவும் நியமித்துள்ளனர். ஆனால் நபி (ஸல்) அவர்களின் பேச்சில் கண்ணியமும் மரியாதையும் நிறைந்திருக்கும்.

நாங்கள் அப்துல்லாஹ் பின் அம்ர் (ர-) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அவர்கள் எங்கüடம் பேசினார்கள். அப்போது அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை; செயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை. மேலும், நபி (ஸல்) அவர்கள், "நற்குணமுடையவரே உங்கüல் சிறந்தவர்' என்று கூறுவார்கள்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்; மஸ்ரூக், நூல்: புகாரி (6035)

கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ, சாபமிடுபவராகவோ, ஏசுபவராகவோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருக்கவில்லை. (ஒருவரைக்) கண்டிக்கும் போது கூட "அவருக்கென்ன நேர்ந்தது? அவருடைய நெற்றி மண்ணில் படட்டும்'' என்றே கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ர-), நூல்: புகாரி (6046)

பெரியவர்களுக்கு மரியாதை

தம்மை விட வயதில் மூத்தவர்களுக்கு நபிகளார் மரியாதை தருபவர்களாக இருந்தார்கள். இவ்வுலகின் இறுதி நாள் வரை உள்ள மக்களுக்காக அனுப்பப்பட்ட இறுதி நபி என்ற ஆணவம் அவர்களிடம் இருக்கவில்லை. தம்மை, சிறு வயதில் எடுத்து வளர்த்த உம்மு ஐமன் (ர-) அவர்களை மரியாதை நிமித்தம் அவர்களின் வீட்டுக்கே சென்று நலம் விசாரித்து வருவார்கள். அவர்கள் கோபப்படும் போது அமைதியாக இருப்பார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உம்மு ஐமன் (ர-) அவர்களிடம் (அவர்களது இல்லத்திற்குச்) சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன்.

உம்மு ஐமன் (ர-) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரத்தைக் கொடுத்தார்கள். அதில் ஏதோ குடிபானம் இருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பாளியாக இருந்தார்களோ, அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் அ(ந்தப் பானத்)தை விரும்பவில்லையோ தெரியவில்லை. (அதை அவர்கள் பருக மறுத்து விட்டார்கள்.)

அதற்காக உம்மு ஐமன் (ர-) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை உரத்த குர-ல் கோபமாகக் கடிந்து கொண்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ர-), நூல்: முஸ்-ம் (4848)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்புக்குப் பின் (கலீஃபா) அபூபக்ர் (ர-) அவர்கள் உமர் (ர-) அவர்களிடம், "நம்மை (அம்மையார்) உம்மு ஐமன் (ர-) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சந்தித்து வந்ததைப் போன்று நாமும் சந்தித்து வருவோம்'' என்று கூறினார்கள்.

அவ்வாறே உம்மு ஐமன் (ர-) அவர்களிடம் நாங்கள் சென்ற போது அவர்கள் அழுதார்கள். அப்போது அவர்கள் இருவரும், "ஏன் அழுகிறீர்கள்? (நம்மிடம் இருப்பதை விட) அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாயிற்றே?'' என்று கேட்டார்கள்.

அதற்கு உம்மு ஐமன் (ர-) அவர்கள், "அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாகும் என்பதை நான் அறியாமல் அழவில்லை. மாறாக, வானி-ருந்து இறைச் செய்தி (வஹீ) வருவது நின்றுவிட்டதே! (அதற்காகத் தான் அழுகிறேன்)'' என்று கூறி, அவர்கள் இருவரையும் அழச் செய்து விட்டார்கள். அவருடன் சேர்ந்து அவர்கள் இருவருமே அழலாயினர்.

அறிவிப்பவர்: அனஸ் (ர-), நூல்: முஸ்-ம் (4849)

உணர்வுக்கு மதிப்பளித்தல்

சிறியவராக இருந்தாலும் பெரியவராக இருந்தாலும் அவர்களுக்கும் சில ஆசைகள் இருக்கும். அது மார்க்கத்திற்கு முரணாக இல்லாத போது அதை நிறைவேற்றி வைப்பது சிறந்த பண்பாகும். இதை நபிகளார் அவர்கள் செய்து சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள்.

ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, "நீ பார்க்க ஆசைப்படுகிறாயா?'' எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர்.
(பிறகு அவர்களை நோக்கி) "அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்'' என்று கூறினார்கள். நான் பார்த்துச் ச-த்த போது, "உனக்கு போதுமா?'' என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். "அப்படியானால் (உள்ளே) போ!'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ர-), நூல்: புகாரி (950)
நபி (ஸல்) அவர்கள் என்னைத் தமது மேல் துண்டால் மறைத்துக் கொண்டிருக்க, பள்ளிவாச-ல் (ஈட்டியெறிந்து) விளையாடிக் கொண்டிருந்த அபிசீனியர்களை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நானாக சடைந்து விடும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். விளையாட்டுகள் மீது பேராவல் கொண்ட இளம் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்!

அறிவிப்பவர்: ஆயிஷா (ர-), நூல்: புகாரி 5236

அன்னை ஆயிஷா (ர-) அவர்கள் விளையாட்டைப் பார்க்க ஆசைப்பட்ட போது அதற்கு நபி (ஸல்) அவர்கள் தடையாக இருக்கவில்லை. மாறாக ஆயிஷா (ர-) அவர்களுக்காகத் தாமும் பார்த்ததுடன், அன்னை ஆயிஷா (ர-) அவர்கள், போதும்! போதும்! என்று சொல்லும் அளவுக்குத் தோள் கொடுத்து நின்று, பார்க்கச் செய்துள்ளார்கள். இறைத் தூதராக இருந்த நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனையோ பணிகள் இருந்த போதும் மனைவியின் ஆசையையும் நிறைவேற்ற வேண்டும் என்று அறிந்து அதற்கும் நேரத்தை ஒதுக்கியுள்ளார்கள்.

நான் (சிறுமியாக இருந்த போது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்த்து) விளையாடுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ர-), நூல்: புகாரி (6130)
ஆசையோடு தன் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த அன்னை ஆயிஷா (ர-) அவர்களைக் கடிந்து கொள்ளவும் இல்லை, தடுக்கவும் இல்லை. மாறாக அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் அவர்களைத் தோழிகளிடம் மீண்டும் விளையாட அனுப்பியுள்ளார்கள்.

சுலபமாக தமிழில் இஸ்லாமிய நூல்கள்

ஸஹீஹுல் புகாரி - 7 பாகமும்
ஸஹீஹுல் புகாரி - பாகம் 1
ஸஹீஹுல் புகாரி - பாகம் 2
ஸஹீஹுல் புகாரி - பாகம் 3
ஸஹீஹுல் புகாரி - பாகம் 4
ஸஹீஹுல் புகாரி - பாகம் 5
ஸஹீஹுல் புகாரி - பாகம் 6
ஸஹீஹுல் புகாரி - பாகம் 7

#####################################

திருக்குர்ஆன் - தமிழ் - பி.ஜே மொழிபெயர்ப்பு
திருக்குர்ஆன் - தமிழ் - ஜான் டிரஸ்ட்

@@@@@@@@@@@@@@@@@@

புலுஹூல் மராம்

*************************
ஸஹீஹூல் முஸ்லிம் பாகம் 1

கூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்

இஸ்லாம் என்பது புற வாழ்க்கையிலும் அக வாழ்க்கையிலும் ஒழுக்க மாண்புகளைக் கற்றுத் தரக் கூடிய மார்க்கமாகும்.


ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வை சொர்க்கத்திற்குரிய வாழ்வாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அவனுடைய வெளிப்புற வாழ்க்கை மட்டுமல்லாது தன்னுடைய சுற்றத்தினரோடு கலந்து வாழ்கின்ற வாழ்க்கையையும் ஒழுக்கமான வாழ்க்கையாக அமைத்துக் கொள்ள வேண்டும்.


நம் தமிழகத்தைப் பொறுத்த வரை பெரும்பான்மையான முஸ்-ம்கள் கூட்டுக் குடும்பமாகத் தான் வாழ்ந்து வருகின்றனர். கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் பலவிதமான நன்மைகள் நிறைந்து காணப்பட்டாலும் வெறுக்கத்தக்க வகையில் தீமைகளும் நிறைந்து தான் காணப்படுகின்றன.


கூட்டுக் குடும்பமாக நாம் வாழ்ந்து வந்தாலும் அதில் மார்க்கம் கூறுகின்ற ஒழுக்க மாண்புகளை முறையாகப் பேணிப் பின்பற்றினால் இது போன்ற ஒழுக்கச் சீர்கேடுகளி-ருந்தும் நம் சமுதாயத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.


தங்கை உறவா? தடுக்கப்பட்ட உறவா?


கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் பெரியப்பா, சித்தப்பாமார்களின் பெண் மக்களை உடன் பிறந்த அக்கா, தங்கை போன்று கருதி அவர்களோடு நெருங்கிப் பழகி வருகின்றனர். வீடுகளில் தனிமையில் அவர்களோடு பேசிக் கொண்டிருப்பது, வாகனங்களில் பின்னால் வைத்து அழைத்துச் செல்வது போன்று பல விதங்களில் கலந்து பழகி வருகின்றனர். இத்தகைய பழக்க வழக்கங்கள் பல நேரங்களில் அவர்களுக்கு மத்தியில் தவறான தொடர்புகள் ஏற்படுவதற்குக் காரணமாகவும் அமைந்து விடுகின்றது.


ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் அல்லது ஒரு தந்தைக்குப் பிறந்தவர்கள் மற்றும் பால்குடிச் சகோதரர்களுக்கு மத்தியில் தான் அண்ணன் தங்கை உறவு ஏற்படுமே தவிர மார்க்க அடிப்படையில் வேறு யாருக்கு மத்தியிலும் அண்ணன் தங்கை உறவு ஏற்படாது.


திருமணம் செய்வதற்கு தடுக்கப் பட்ட உறவுகளை திருமறைக் குர்ஆன் விவரித்துள்ளது. இந்த உறவினர்களை மணக்க அனுமதியில்லை.


ஆண்கள் மணமுடிக்கக் கூடாத உறவுகள்


1. தாய், 2. மகள், 3. சகோதரி, 4.தாயின் சகோதரி, 5. தந்தையின் சகோதரி, 6. சகோதரனின் புதல்விகள், 7. சகோதரியின் புதல்விகள், 8. பாலூட்டிய அன்னையர், 9. பாலூட்டிய அன்னையின் புதல்விகள், 10. மனைவியின் தாய், 11. மனைவியின் புதல்வி, 12. மகனின் மனைவி, 13. இரு சகோதரிகளை ஒரே காலத்தில் மனைவியராக்குதல்


பெண்கள் மணமுடிக்கக் கூடாத உறவுகள்


1. தந்தை 2. மகன் 3. சகோதரன் 4. தாயின் சகோதரன் 5. தந்தையின் சகோதரன் 6. சகோதரனின் மகன் 7. சகோதரியின் மகன் 8. பாலூட்டிய அன்னையின் கணவன் 9. பாலூட்டிய அன்னையின் மகன் 10. கணவனின் தந்தை 11. கணவனின் புதல்வன் 12. புதல்வியின் கணவன் 13. சகோதரியின் கணவனை, சகோதரியுடன் வாழும் போது மணப்பது ஆகியவை தடுக்கப்பட்டுள்ளன.


திருக்குர்ஆன் 4:23 வசனத்தி-ருந்து இதை அறியலாம்.


உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) விலக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாக ரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (விலக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (விலக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.


திருக்குர்ஆன் 4:23


இரத்த சம்பந்தத்தால் யாரைத் திருமணம் செய்யக் கூடாது என்று மேலே நாம் குறிப்பிட்டோம். அன்னியப் பெண்ணிடம் பால் குடித்ததால் மேற்கண்ட உறவு முறை ஏற்படுமானால் அவர்களையும் மணக்கக் கூடாது.


அதாவது ஒரு பெண்ணிடம் ஒருவன் பாலருந்தி விட்டால் அவள் தாயாகி விடுகிறாள். இதன் காரணமாக அவளது சகோதரி சின்னம்மா அல்லது பெரியம்மா ஆகி விடுவார்கள். எனவே அவரையும் மணக்கக் கூடாது.


அவளது சகோதரன் அல்லது சகோதரியின் மகளையும் மணக்கக் கூடாது. பாலூட்டிய அன்னையை பெற்ற தாய் இடத்தில் வைத்துப் பார்த்தால் அவளது உறவினர்கள் நமக்கு மேற்கண்ட உறவு முறையுடையவர்களானால் அவர்களை மணக்கக் கூடாது.


இரத்த சம்பந்தத்தால் தடுக்கப்பட்ட உறவு முறைகள், பால் அருந்திய உறவு முறையிலும் தடுக்கப்பட்டதாகும் என்பது நபிமொழி.


அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ர-)
நூல்: புகாரி 2451, 4719


இது தவிர ஒரு பெண்ணை மணந்து அவளுடன் வாழும் போது அவளது தாயின் சகோதரியையும் சேர்த்து மணக்கக் கூடாது. அது போல் மனைவியின் தந்தையின் சகோதரியையும் சேர்த்து மணக்கக் கூடாது.


(பார்க்க: புகாரி 4719)


மனைவி மரணித்து விட்டாலோ விவாகரத்து ஆகி விட்டாலோ மனைவியின் தாயுடைய சகோதரியை, மனைவியின் தந்தையுடைய சகோதரியை மணக்கத் தடையில்லை.


மேற்கண்ட பட்டிய-ல் பெரியப்பா, சித்தப்பாமார்களின் மகள்கள் இடம் பெறவில்லை. இதி-ருந்து பெரியப்பா, சித்தப்பாமார்களின் மகள்கள் அந்நியப் பெண்களே என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். அவர்களைத் திருமணம் செய்வது ஆகுமானதாகும்.


ஆனால் ஷாஃபி மத்ஹபினர் இதனை ஹராமாக்கி வைத்துள்ளனர். இதனை எந்த ஆ-ம்களும் வெள்ளி மேடைகளில் கண்டித்து உரையாற்றுவது கிடையாது. யாராவது பேசினாலும் அவர்களை ஒரு விதமாக பார்க்கக் கூடிய நிலை தான் காணப்படுகிறது.


எனவே கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் அந்நிய ஆணும் பெண்ணும் அண்ணன் தங்கை போன்று கலந்து வாழ்கின்ற இது போன்ற ஒழுக்கச் சீர்கேடுகள் நிகழாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமானதாகும்.


அண்ணி ஓர் அந்நியப் பெண்ணே


அது போன்று கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் அண்ணியை அன்னை போன்றோ அக்கா போன்றோ கருதி அவர்களோடு நெருங்கிப் பழகக்கூடிய நிலையும் அதிகமாகக் காணப்படுகிறது. இத்தகைய உறவும் பலவிதமான தவறுகள் நிகழ்வதற்குக் காரணமாக அமைகின்றது. இவ்வாறு கலந்துறவாடுவது மார்க்கம் காட்டுகின்ற மாண்பிற்கு எதிரானதாகும்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகüல் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்'' என்று கூறினார்கள்


அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ர-) நூல்: புகாரி 5232


அனுமதி கோரல்


கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் மார்க்கத்திற்கு எதிரான பல்வேறு நடைமுறைகள் நிறைந்து காணப்படுகின்றன. அதில் ஒன்று, வீடுகளுக்குள் நுழையும் போது பேண வேண்டிய ஒழுக்கங்கள் பின்பற்றப் படுவதில்லை.


கூட்டுக் குடும்பமாக இருந்தாலும் அதற்குரிய தனித்தன்மை காக்கப்பட வேண்டும். அண்ணன் தம்பிகள் திருமணம் செய்து ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் அனைவருக்கும் தனித் தனி அறைகளை ஏற்பாடு செய்து, மார்க்கம் கூறுகின்ற ஒழுக்கங்களை அங்கு மிகவும் கண்டிப்புடன் கடைப்பிடித்தால் பல்வேறு விதமான ஒழுக்கச் சீர்கேடுகள் அரங்கேறுவதை விட்டும் நம் குடும்பத்தினரை பாதுகாத்துக் கொள்ளலாம். அதில் ஒன்று தான் வீடுகளுக்குள்ளோ மற்றவரின் அறைகளுக்குள்ளோ செல்லும் போது அனுமதி பெற்றுச் செல்வதாகும்.


நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள். (அல்குர்ஆன் 24:27)


அல்லாஹ்வின் இந்தக் கட்டளைக்கு மாற்றமாக வீட்டில் உள்ள பெண்களிடம் ஏதாவது ஓர் உறவு முறையில், ஊர் பழக்கத்திற்குத் தக்க மச்சி, மாமி, மதினி என்று கூறிக் கொண்டு உரிமையுடன் உத்தரவின்றி உள்ளே நுழைந்து விடுகின்றார்கள்.


அல்லாஹ்வின் வசனத்தின் அடிப்படையில் இது தடை செய்யப்பட்ட காரியமாகும்.


கணவன், மனைவி என இருவரும் இணைந்திருக்கும் போது, அல்லது ஆணோ, பெண்ணோ தனியாக இருக்கும் போது பல்வேறு விதமான அசவுகரியங்களில் இருப்பார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டு அல்லாஹ் தன் திருமறையில், அனுமதி இல்லையேல் திரும்பி விடுங்கள் என்று கூறுகின்றான்.
அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள்! "திரும்பி விடுங்கள்!'' என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன். (அல்குர்ஆன் 24:28)


இந்தக் கட்டளையின் படி, உள்ளே வர அனுமதியில்லை என்றால் கண்ணியமான முறையில் திரும்பி விட வேண்டும். இன்று இது போல் வீட்டுக்கு வந்தவரிடம் வீட்டில் உள்ளவர் தெரிவித்து விட்டால் வந்தவர் கோபித்துக் கொள்கின்றார். "நான் வாசல் தேடி வந்தேன்; உள்ளேயிருந்து கொண்டே என்னை வாசற்படியில் நிற்க வைத்தே அனுப்பி விட்டார்' என்று வந்தவர் வீட்டுக்காரரைப் பற்றிக் குறை கூறிப் பொறுமுகின்றார். இந்த வசனத்தின் பொருளை உணர்ந்து கொண்டால் இந்தப் பொறுமலுக்கு அவர் இடமளிக்க மாட்டார்.


தெளிவாகப் பெயரைச் சொல்லுதல்


வாச-ல் வந்து அனுமதி கேட்பவர், தான் இன்னார் என்று குறிப்பிட்டுத் தன் பெயரை தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். மொட்டையாக "நான் தான்' என்று கூறக் கூடாது.


என் தந்தை (ஒரு யூதருக்குக்) கொடுக்க வேண்டியிருந்த ஒரு கடன் விஷயமாக நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்று கதவைத் தட்டினேன். அப்போது அவர்கள், "யாரது?'' என்று கேட்டார்கள். அதற்கு நான், "நான் தான்'' என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "நான் தான் என்றால்...?'' என்று அதை விரும்பாதவர்கள் போல் கூறினார்கள்.


அறிவிப்பவர்: ஜாபிர் (ர-)
நூல்: புகாரி 6250


மூன்று முக்கிய நேரங்கள்


கூட்டாக வாழ்கின்ற வாழ்க்கையில் நம்முடைய குழந்தைகளும் முக்கிய அங்கம் வகிக்கின்றனர். அவர்களுக்குரிய ஒழுங்கங்களையும் நாம் அவர்களுக்கு முறையாகக் கற்பிக்க வேண்டும். பின்வரும் வசனத்தில் மூன்று நேரங்களில் குழந்தைகள் கூட அனுமதி பெற்றுத் தான் வீட்டிற்குள் நுழைய வேண்டும் என இறைவன் கட்டளையிடுகின்றான்.


நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பக-ல் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க(நேர)ங்கள். இதன் பின்னர் அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.


உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 24:57, 58)


இந்த நேரங்கள் பெண்கள் தங்கள் படுக்கைக்கு ஒதுங்குகின்ற அல்லது ஓய்வெடுக்கின்ற நேரங்களாகும். இந்நேரங்களில் வீட்டில் பணியாற்றும் அடிமைகள் மற்றும் பருவ வயதை அடையாத பாலகர்கள் கூட அனுமதி பெற்றுத் தான் வரவேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான் என்றால் மற்றவர்கள் அனுமதி பெறாமல் வரலாமா?


மூன்று முறை அனுமதி கோரல்


நான் அன்சாரிகளின் அவை ஒன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது பதற்றமடைந்தவரைப் போன்று அபூமூஸா (ர-) அவர்கள் வந்தார்கள். "நான் உமர் (ர-) அவர்களிடம் (அவர்களது வீட்டிற்குள் நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆகவே நான் திரும்பி விட்டேன். பின்பு உமர் (ர-), "(உங்களை வரச் சொல்-யிருந்தேனே) நீங்கள் ஏன் வரவில்லை?'' என்று கேட்டார்கள். அதற்கு நான், "மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதியளிக்கப் படவில்லை. ஆகவே நான் திரும்பி வந்து விட்டேன். (ஏனெனில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “"உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும். அவருக்கு அனுமதி வழங்கப் படவில்லை என்றால் அவர் திரும்பி விடட்டும்'’ என்று கூறியுள்ளார்கள்'' என்று கூறினேன். அதற்கு உமர் (ர-) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு நீங்கள் சாட்சியைக் கொண்டு வர வேண்டும்'' என்று கூறினார்கள். இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றவர் யாரேனும் உங்களில் உள்ளாரா?'' என்று அபூமூஸா (ர-) கேட்டார்கள்.


அதற்கு உபை பின் கஅப் (ர-) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! மக்களில் மிகச் சிறியவரே உங்களுடன் (இப்போது சாட்சி சொல்ல) வருவார்'' என்று சொன்னார்கள். அங்கு நான் தான் மக்களில் சிறியவனாக இருந்தேன். எனவே நான் அபூமூஸா (ர-) அவர்களுடன் சென்று, "நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னார்கள்'' என்று உமர் (ர-) அவர்களிடம் தெரிவித்தேன்.


அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ர-), நூல்: புகாரி 6245


பார்வையை உள்ளே செலுத்தாதிருத்தல்


ஒருவர் இன்னொருவர் வீட்டிற்கு வரும் போது, வீட்டில் நுழைவதற்கு அனுமதி பெறுவதற்கு முன், வீட்டுக்குள் பார்வையைச் செலுத்தக் கூடாது. வீட்டில் இருக்கும் அந்நியப் பெண்களின் மீது பார்வை பட்டு விடக் கூடாது என்பது தான் நபி (ஸல்) அவர்களது கட்டளையின் முக்கிய நோக்கமாகும். இதைப் பின்வரும் ஹதீஸ் தெரிவிக்கின்றது.


ஒரு மனிதர் ஒரு துவாரத்தின் வழியாக நபி (ஸல்) அவர்களின் வீட்டினுள் எட்டிப் பார்த்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஈர்வ-ச் சீப்பால் தமது தலையைக் கோதிக் கொண்டிருந்தார்கள். (அவர் எட்டிப் பார்ப்பதையறிந்த) நபி (ஸல்) அவர்கள், "நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று எனக்குத் தெரிந்திருந்தால் இந்த ஈர்வ-யைக் கொண்டே உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று சட்டமாக்கப்பட்டதே பார்வைகள் (வரம்பு மீறி வீட்டிலுள்ளவர்கள் மீது விழக் கூடும் என்ற) காரணத்தினால் தான்'' என்று கூறினார்கள்.


அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ர-), நூல்: புகாரி 5294


பார்வையைப் பறித்தாலும் பாவமில்லை


இதனையும் மீறி பார்வையை உள்ளே செலுத்துபவர் மீது கையில் இருப்பதை விட்டெறிந்து கண்ணைப் பறித்தால் கூட தப்பில்லை என்று சொல்லும் அளவுக்கு நபி (ஸல்) அவர்களது கட்டளை அமைந்துள்ளது.


ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றின் வழியாக எட்டிப் பார்த்தார். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் நீளமான அம்பின் கூர்முனையுடன் அவருக்குத் தெரியாமல் அவரை நோக்கிச் சென்று (அவருடைய கண்ணில்) குத்துவதற்குச் சென்றதை இப்போதும் நான் பார்ப்பது போல் உள்ளது.


அறிவிப்பவர்: அனஸ் (ர-)
நூல்: புகாரி 6242


உன் அனுமதியின்றி ஒரு மனிதர் உன்னை எட்டிப் பார்த்த போது அவர் மீது நீ சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரது கண்ணைப் பறித்து விட்டால் உன் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று அபுல்காஸிம் (முஹம்மத்-ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-)
நூல்: புகாரி 6902


அடுத்தவர் வீட்டுக்கு ஒருவர் செல்லுகையில் மேற்கண்ட அல்லாஹ்வின் கட்டளைகளையும், அவனது தூதருடைய கட்டளைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


திரையைத் தொங்க விடுதல்


வீட்டிற்கு வருபவருக்கென்று ஒழுங்கு முறைகள் இருப்பது போல் வீட்டில் உள்ளவருக்கும் அனுமதியளிக்கும் விஷயத்தில் வரைமுறைகள், ஒழுங்கு முறைகள் உள்ளன. வீட்டில் இருப்பவர்கள் வருவோர், போவோர், தெருவில் கடந்து செல்வோர் யாரும் பார்வைகளைச் செலுத்துவதற்கு வசதியாக வாசலைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கக் கூடாது. திரைகளைத் தொங்கப் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
மேற்கண்ட வசனங்களிலும், ஹதீஸ்களிலும் வீட்டில் இருப்பவர்களும் இது போன்று அடுத்தவர் பார்வையில் படும்படி இருக்கக் கூடாது என்பதையும் சேர்த்தே தெரிவிக்கின்றன. நபி (ஸல்) அவர்களது வீட்டிலும், அவர்களது மகளார் பாத்திமா (ர-) வீட்டிலும் திரைகள் தொங்கிக் கொண்டிருந்ததை புகாரி மற்றும் இதர நூல்களில் இடம் பெற்றுள்ள பல்வேறு ஹதீஸ்களில் நாம் காண முடிகின்றது.


தமிழகத்தின் சில பகுதிகளிலுள்ள முஸ்-ம் பெண்களிடம் ஒரு வழக்கம் உண்டு. அவர்கள் பேருந்துகளில் செல்லும் போது தாடி, தலைப்பாகையுடன் யாரேனும் பேருந்தில் ஏறினால் அப்பெண்கள் தங்கள் புர்க்காவை நன்கு இழுத்துப் போர்த்திக் கொள்வார்கள். வெட்கப்படுவதற்கு இவர்கள் மட்டும் தகுதியானவர்கள், மற்றவர்கள் கிடையாது என்ற போங்கில் இவர்களது இந்தச் செயல் அமைந்திருக்கும். அது போல் இன்று புர்கா சட்டத்தைப் பேணக் கூடிய முஸ்-ம்கள் குறிப்பாக குர்ஆன், ஹதீஸைப் பேணக் கூடியவர்களின் வீட்டிலும் ஒரு விநோதம் நடக்கின்றது.


ஓரளவுக்கு மார்க்கப் பற்றுள்ள முஸ்-ம்கள் வந்தால் ஒழுக்க மரியாதையுடன் முறைப்படி அனுமதி அளிக்கின்றனர். பேணுதலுடன் நடந்து கொள்கின்றனர்.


ஆனால் அதே சமயம் கார் டிரைவர்கள், கொத்தனார்கள், தச்சர்கள், காய்கறி வியாபாரிகள், பால்காரர்கள், பூக்காரர்கள், வளையல்காரர்கள், சிட்டை வட்டிக்காரர்கள், தங்கள் வயல்களில் உழும் விவசாயிகள், வயர்மேன்கள், பிளம்பர்கள் குறிப்பாக பொற்கொல்லர்கள் ஆகியோர் சர்வ சாதாரணமாக வீட்டிற்கு வந்து செல்கின்றார்கள். இவர்களைப் பெண்கள் கண்டு கொள்வதே கிடையாது. இத்தகையவர்கள் சமையலறை வரை சர்வ சாதாரணமாகப் பவனி வருகின்றார்கள்.


பெண்கள் அடுக்களையில் சமையல் பணியில் இருக்கும் போது முற்றிலும் தங்கள் ஆடைகளைச் சரி செய்து கொண்டு நிற்க இயலாது. இது போன்ற கட்டங்களைப் பெண்களும் வெட்கப்படுவதற்குரிய கட்டங்கள் என்று கருதுவது கிடையாது. இது போன்ற சந்தர்ப்பங்களில் அந்நிய ஆண்களை சர்வ சாதாரணமாக வீட்டிற்குள் அனுமதிப்பது இறைக் கட்டளைக்கு மாற்றமானதாகும்.


இதற்கெல்லாம் காரணம், அல்லாஹ்வின் கட்டளையை முழுமையாக உணர்ந்து செயல்படாதது தான்.


தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.


அல்குர்ஆன் 24:31


இந்த இறைக் கட்டளையைப் பெண்கள் பேணி நடக்க வேண்டும். இந்த இறைக் கட்டளைகளைப் பேணி நடந்தால் நம்முடைய கூட்டுக் குடும்ப வாழ்க்கை மிகச் சிறந்த வாழ்க்கையாக, ஒழுக்கமான வாழ்க்கையாக, மறுமையில் வெற்றி பெறக் கூடிய வாழ்க்கையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை